செய்திகள்

டெல்லியில் தசரா கொண்டாட்டம் - ராவணன் கொடும்பாவியை எரித்த பிரதமர் மோடி

Published On 2018-10-19 13:11 GMT   |   Update On 2018-10-19 13:11 GMT
தசரா பண்டிகையையொட்டி டெல்லி செங்கோட்டை திடலில் இன்று ராமலீலா நாடகத்தை ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி, அம்பின் மூலம் ராவணன் கொடும்பாவிக்கு தீயிட்டார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
புதுடெல்லி:

வட மாநிலங்களில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில்,நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள செங்கோட்டை திடலில் இன்று ‘லவ-குசா’ ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள், பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டு களித்தனர்.

நாடகத்தின் முடிவில் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவியை மேடையில் நின்றவாறு பிரதமர் மோடி அம்பின் மூலம் தீயிட்டு கொளுத்தினார். #PMModi #ModiburnsRavaneffigy #Dusherracelebrations
Tags:    

Similar News