செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லியில் ஒரு பிரிவு விவசாயிகள் தொடர் போராட்டம்

Published On 2018-10-03 21:59 GMT   |   Update On 2018-10-03 21:59 GMT
விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு பிரிவு விவசாயிகள் தலைநகரில் உள்ள ஜந்தர்மந்தர் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Farmer #Protest #Delhi
புதுடெல்லி:

விவசாயிகளுக்கு பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த திரளான விவசாயிகள் அதன்தலைவர் நரேஷ்திகாயத் தலைமையில் தடையை மீறி டெல்லியில் நுழைந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.



அந்த அமைப்பை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லியை விட்டு வெளியேறினர். இதுபற்றி அந்த சங்கத்தை சேர்ந்த ராகேஷ் சிங் திகாத் கூறுகையில் விவசாயிகள் போராட்டம் வெற்றி அடைந்ததாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையே பாரதீய கிசான் யூனியன் விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு பிரிவு விவசாயிகள் மதுரா, உத்தரபிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று மதியம் நொய்டா வழியாக டெல்லி வந்தனர். பின்னர் அவர்கள் தலைநகரில் உள்ள ஜந்தர்மந்தர் திடலில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். #Farmer #Protest #Delhi
Tags:    

Similar News