செய்திகள்

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி

Published On 2018-09-24 05:48 GMT   |   Update On 2018-09-24 05:48 GMT
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. #Congress #PunjabRuralPolls
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள ஜில்லா பரி‌ஷத்களில் 353 மண்டலங்களுக்கும், 150 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 2899 மண்டலங்களுக்கும் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது.

இதில் ஜில்லா பரிவுர்களில் 353 மண்டலங்களில் காங்கிரஸ் 331 இடங்களில் வெற்றிபெற்று கைப்பற்றியது. சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களிலும், பா.ஜனதா 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதேபோல் 150 பஞ்சாயத்து சமிதிகளில் உள்ள 2899 மண்டலங்களில் 2351 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. சிரோன்மணி அகாலிதளம் 353 இடங்களிலும், பா.ஜனதா 63 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும் வெற்றி பெற்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றது. ஆனால் தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏமாற்றமே கிடைத்தது.

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கைப்பற்றி சங்ரூர் தொகுதியில் உள்ள 10 பஞ்சாயத்துகளில் உள்ள 193 மண்டலங்களில் 123 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

இதேபோல் ஆம் ஆத்மி கைப்பற்றிய மால்பா, பதிண்டா சட்டசபை தொகுதிகளில் உள்ள உள்ளாட்சி இடங்களில் தோல்வியே பெற்றது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கூறியதாவது:-

எங்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இந்த வெற்றி சென்றடையும். விவசாயிகள் கடன் தள்ளுபடி, போதை மருந்துகளுக்கு எதிரான நடவடிக்கை என அனைத்து வி‌ஷயங்களிலும் மக்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #PunjabRuralPolls
Tags:    

Similar News