செய்திகள்

துப்பாக்கிச் சண்டையில் காஷ்மீர் பயங்கரவாதி இன்று கொல்லப்பட்டான்

Published On 2018-09-23 10:57 GMT   |   Update On 2018-09-23 10:57 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் தேடுதல் வேட்டையின் போது துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Militantkilled #Pulwamaencounter
ஸ்ரீநகர்:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட டார்  கானி குன்ட் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சிற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Militantkilled #Pulwamaencounter
Tags:    

Similar News