செய்திகள்

இந்தியாவின் மூத்த தலைவர்களுடன் பணியாற்றிய முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மரணம்

Published On 2018-09-18 07:32 GMT   |   Update On 2018-09-18 07:32 GMT
இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா தனது 91-வது வயதில் மும்பையில் இன்று காலமானார். #AnnaRajamMalhotra #IAS #RIPAnnaRajamMalhotra
மும்பை:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் பிறந்தவர் அன்னா ராஜம் மல்ஹோத்ரா. இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இவர், 1951-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது காவல்துறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரிடமும், ஏழு முதலமைச்சர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமைக்கு உரியவர் அன்னா ராஜம்.

இவர் தனது 91-வது வயதில் மும்பையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #AnnaRajamMalhotra #IAS #RIPAnnaRajamMalhotra
Tags:    

Similar News