செய்திகள்

உத்தரகாண்டில் மலைப்பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன் - 13 பேர் பலி

Published On 2018-09-03 12:48 GMT   |   Update On 2018-09-03 16:00 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand #Accident
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்ஜ் பள்ளத்தாக்கின் மேல் இன்று மதியம் சென்று கொண்டிருந்த வேன், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் அந்த வேன் கவிழ நேரிட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்களில் 13 பேர் உயிரிழந்ததாகவும், மீனாட்சி மற்றும் ராதா ஆகிய இரு சிறுமிகள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட கார்ஜ் பள்ளத்தாக்கில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளில் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Uttarakhand #Accident
Tags:    

Similar News