செய்திகள்

வெள்ள நிவாரண நிதி தேவைக்காக லாட்டரி சீட்டு நடத்த கேரள அரசு முடிவு

Published On 2018-08-21 22:21 GMT   |   Update On 2018-08-21 22:21 GMT
கேரளா வெள்ள நிவாரண பணிகளுக்காக சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தத கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #Lotttery
திருவனந்தபுரம்:

கேரள மாநில மந்திரிசபை கூட்டம், முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவைப்படும் நிதியை திரட்டுவதற்காக, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) மீது 10 சதவீத கூடுதல் வரி (செஸ்) விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுபோல், நிதி தேவைக்காக, சிறப்பு லாட்டரி சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  #KeralaFlood #Lotttery
Tags:    

Similar News