செய்திகள்

மத்தியப்பிரதேசம் மன்ட்சவுர் பகுதியில் 7 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் இருவருக்கு மரண தண்டனை

Published On 2018-08-21 11:08 GMT   |   Update On 2018-08-21 11:08 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 7 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #2mengetdeathsentence #Mandsaurminorgirl
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம், மன்ட்சவுர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்லவரும் தந்தைக்காக 7 வயது சிறுமி காத்திருந்தாள்.

அப்போது, அங்கு வந்த இர்பான்(எ)பய்யு(20), ஆசிப்(24) ஆகியோர் அந்த சிறுமியின் வாயைப்பொத்தி அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகாமையில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் சிறுமியை கற்பழித்தனர். மேலும், கழுத்தை அறுத்து அவளை கொல்லவும் முயன்றனர்.

உயிருக்கு போராடி, கதறிய சிறுமியின் கூச்சலை கேட்டு அப்பகுதியை கடந்துசென்ற சிலர் உதவிக்கு ஓடிவந்தனர். இதை கண்டதும் அந்த இரு காமுகர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிறப்புறுப்பு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் படுகாயங்களுடன் கிடந்த சிறுமியை இந்தூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இன்னும் அவள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவ்வழக்கை விரைந்து விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி நிஷா குப்தா, குற்றவாளிகள் இருவருக்கும் (சமீபத்தில் அமலுக்கு வந்த 12 வயதுக்கும் குறைவான சிறார்-சிறுமியர் கற்பழிப்பு தண்டனை சட்டத்தின்கீழ்) மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார். #2mengetdeathsentence  #Mandsaurminorgirl   
Tags:    

Similar News