செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு

Published On 2018-08-16 14:15 GMT   |   Update On 2018-08-16 14:15 GMT
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. #AtalBihariVajpayee #RIPVajpayee
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்தது. இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமரான பாரத ரத்னா வாஜ்பாய் அவர்களின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  #AtalBihariVajpayee #RIPVajpayee
Tags:    

Similar News