செய்திகள்
ஐதராபாத் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு
தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் நோக்கத்தில் இன்றிரவு ஐதராபாத் நகரை வந்தடைந்த ராம்நாத் கோவிந்துக்கு தெலுங்கானா கவர்னர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. #ramnathkovind
ஐதராபாத்:
தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதில் முதல்கட்டமாக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் இன்றிரவு ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பேட் விமான நிலையம் வந்துசேர்ந்த ஜனாதிபதியை தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், துணை முதல் மந்திரிகள் கடியம் ஸ்ரீஹரி, முஹம்மது மஹ்மூத் அலி மற்றும் அம்மாநில மந்திரிகள், சட்டசபை உறுப்பினர்கள் பூங்கொத்துகள், மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind