செய்திகள்

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு மகாரஷ்டிரா அரசு வேலைவாய்ப்பு

Published On 2018-07-29 15:31 GMT   |   Update On 2018-07-29 15:31 GMT
மகாராஷ்டிரா மாநில பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #MaharashtraAccident
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் தபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள் சேர்ந்த 31 ஊழியர்கள்., சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு நேற்று சுற்றுலா சென்றனர்.

ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்ததுக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டும் உயிர்பிழைத்தார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.

மேலும், அம்மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவ சேனா கட்சி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. #MaharashtraAccident
Tags:    

Similar News