செய்திகள்

தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தோட்டா பாய்ந்து 13 வயது சிறுவன் பலி

Published On 2018-07-08 04:16 GMT   |   Update On 2018-07-08 04:16 GMT
காரில் இருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது எதிர்பாராத விதமாக தோட்டா பாய்ந்து 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
லக்னோ:

பஞ்சாப் மாநில மந்திரியிடம் உதவியாளராக இருக்கும் ரவிந்தர் சிங் பாபி, தனது மகன் அஹ்ரானுட்டன் கோடை விடுமுறைக்காக உத்தரகாண்ட் செல்லும் போது, காரின் முன் பகுதியில் உள்ள பெட்டில் இருந்து துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து அஹ்ரான் சுட, தோட்டா பாய்ந்து 13 வயது அஹ்ரான் உயிரிழந்துள்ளார்.

இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை காரில் செல்வதால் பெட்டியில் வைத்ததாக கூறிய பாபி, கண் இமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News