செய்திகள்
மேற்கு வங்காளத்தில் கனமழைக்கு 6 பேர் பலி
மேற்கு வங்காள மாநிலத்தில் பெய்து வரும் மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #WestBengal #HeavyRain
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர். ஐந்து பேர் மின்னலுக்கு பலியாகினர். மேலும் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார். இதில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
பலத்த மழையால் ரெயில்வே தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டதால் கிழக்கு ரெயில்வே மற்றும் தென் கிழக்கு ரெயில்வே சார்பில் இயங்கும் ரெயில்கள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி அலுவலகம் மற்றும் பள்ளி செல்வோர் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இன்னும் சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை மையத்தினர் அறிவித்துள்ளனர் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #WestBengal #HeavyRain