செய்திகள்

குஜராத் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் மூத்த அதிகாரி பலி

Published On 2018-06-05 23:30 GMT   |   Update On 2018-06-05 23:30 GMT
குஜராத் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானத்தை இயக்கிய அதிகாரி சஞ்சய் சவுகான் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார். #Gujarat #IAF
கட்ச்:

குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை ஜாகுவார் ரக போர் விமானம் வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டது. விமானத்தை அந்த விமானப்படை தளத்தின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் சவுகான் இயக்கினார்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்ச் மாவட்டம் பரேஜா கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நொறுங்கி விழுந்தது. இதில் விமானத்தை இயக்கிய அதிகாரி சஞ்சய் சவுகான் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

விமானத்தின் பாகங்கள் அந்த கிராமத்தின் புறநகர் பகுதியில் நீண்டதூரத்துக்கு சிதறி விழுந்தன. இதில் அந்த வயலில் மேய்ந்துகொண்டிருந்த பல பசு மாடுகள் ஆங்காங்கே இறந்து விழுந்தன. இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

Tags:    

Similar News