search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி பலி"

    • சிதம்பரத்தில் இன்று விபத்து மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியத்தில் தனியார் நிறுவன அதிகாரி பலியானார் .
    • விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரைப்பாளையத்தைை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 45). இவர் சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் நோக்கி சென்றார். அப்போது எதிரேவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதனை திருநின்றவூரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரீஷ் ஒட்டிவந்தார். இந்த விபத்தில் முத்துகுமரன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முத்துகுமரன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து சிதம்பரம் டவுன் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • சீமான் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் மேலவளி பகுதியைச் சேர்ந்த சீமான்.இவர் தேளூர் மின்சார வாரியத்தில் மின் ஊழியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் வார சந்தை பகுதி அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டர் சைக்கிள் எதிர்பாராத விதமாக சீமான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சீமான் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீமான் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×