செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் துப்பாக்கிச்சண்டையில் இரு இந்திய வீரர்கள் உயிரிழப்பு

Published On 2018-06-03 00:09 GMT   |   Update On 2018-06-03 00:09 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்துடனான துப்பாக்கிச் சண்டையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். #crossborderfiring #Pakistanfiring

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்தியா வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. #crossborderfiring #Pakistanfiring
Tags:    

Similar News