செய்திகள்
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது பா.ஜ.க. அரசு - மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மோடி
மத்திய பா.ஜ.க. அரசு நான்காண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். #4YearsOfModi #4YearsOfModiGovt
புதுடெல்லி:
பா.ஜ.க. அரசின் நான்காண்டு நிறைவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
‘பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5-வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும்’ என மோடி கூறியுள்ளார். #4YearsOfModi #4YearsOfModiGovt
மத்தியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா அரசு இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 4 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. அரசின் நான்காண்டு நிறைவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
‘பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது. இதே உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5-வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும்’ என மோடி கூறியுள்ளார். #4YearsOfModi #4YearsOfModiGovt