செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் 3 குழந்தைகளுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை

Published On 2018-05-14 08:13 GMT   |   Update On 2018-05-14 08:13 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 3 குழந்தைகளுடன் தாய் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கிசல்வாஸ் கிராமத்தை சேர்ந்த பிரீத்தி என்ற பெண் தனது 2 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு நேற்று குளத்தில் குத்தித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர்களின் உடல்கள் குளத்தில் இருந்து இன்று மீட்கப்பட்டன.

அந்த பெண் இந்த விபரீத முடிவை எடுக்க குடும்ப பிரச்சனை தான் காரணம், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக அம்மாவட்ட எஸ்.பி. டாக்டர். ஒ.பி.சிங் தெரிவித்துள்ளார். #tamilnews
Tags:    

Similar News