செய்திகள்

டெல்லியில் 14 வயது சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது

Published On 2018-04-19 07:21 GMT   |   Update On 2018-04-19 07:21 GMT
டெல்லியில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்து வீட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:

டெல்லி புறநகரான ரோகினி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கற்பழித்து உள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இந்த பலாத்கார சம்பவம் நடந்தது. அதோடு பலாத்காரம் செய்வதை அவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர். ஆட்சேபனைக்குரிய இந்த வீடியோவை அவர்கள் வாட்ஸ்அப்பில் பரவ விட்டனர்.

இந்த சம்பவத்தை அந்த சிறுமியின் தாயாரிடம் அவர்கள் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான பக்கத்து வீட்டு வாலிபர் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை கைது செய்தனர்.
Tags:    

Similar News