செய்திகள்

நடிகர் சல்மான் கான் வீட்டு சுவரை ஏறி குதித்த சிறுமி கைது

Published On 2018-04-04 08:11 GMT   |   Update On 2018-04-04 08:11 GMT
மும்பையில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டு சுவரை ஏறி குதித்த சிறுமியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் அருகே உள்ள பெரைசா நகரைச் சேர்ந்த 15-வயது சிறுமி பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். அவரை சந்திக்க வேண்டும் என மிகுந்த ஆவலுடன் இருந்தார். இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறினார்.

அங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பந்ரா ரெயில் நிலையத்தை நேற்று வந்தடைந்தார். சிறுமியிடம் சல்மான் கான் வீட்டு முகவரி இருந்துள்ளது. அதனை வைத்து பான்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள சல்மான் கான் வீட்டிற்கு சென்றார். ஆனால் சிறுமியை வீட்டிற்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட வில்லை. இதனால் சிறுமி வீட்டுச்சுவரை ஏறி குதிக்க முயன்றார். அதனைப் பார்த்த வீட்டுக்காவலர்கள் சிறுமியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிறுமியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் அட்டையை கொண்டு அவரின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே சிறுமி சிறார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சல்மானை காண வேண்டும் ஆசையில் 15-வயது சிறுமி வீட்டை விட்டு ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News