செய்திகள்
டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் - ப. சிதம்பரம்
சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டேன் என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #PChidambaram #ChennaiAirport
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் டீ ரூ.135க்கும், காபி ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் விலையை கேட்டவுடன் வாங்க மறுத்து விட்டதாகவும் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியுள்ளதாவது:-
சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டேவில் டீ கேட்டேன். சுடு தண்ணீரும், டீ பையும் கொடுத்தனர், விலை ரூ.135. அதிர்ச்சியடைந்து, வாங்க மறுத்துவிட்டேன். அது சரியா? தவறா?.
காபி ரூ.180. அதை யார் வாங்குவார்கள் என கேட்டேன். அதற்கு ‘பலர்’ என பதில் வந்தது. நான் பழைமையாகி விட்டேனோ?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #PChidambaram #ChennaiAirport #tamilnews