என் மலர்

    நீங்கள் தேடியது "Chennai Airport"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்தில் வைத்திருப்பதை கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
    • தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    சென்னை விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகு, எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று மீண்டும் விமானங்களில் சென்னை காமராஜர் விமான நிலையம் வந்தடைந்துள்ளோம் என்கிற முறையான அறிவிப்பு வெளியிட்டு வருவதும், மீண்டும் காமராஜரின் உருவ படத்தை விமான நிலைய வளாகத்திற்குள் வைத்திருப்பதையும் கண்டு காமராஜரின் தொண்டர்கள் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.

    அதே போன்று சென்னையில் சுமார் ரூ.2,400 கோடியில் புதுப்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட விமான நிலையத்தை வருகிற 27-ந்தேதி அன்று தங்களின் திருக்கரங்களால் திறந்த வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நல்ல வேளையில் பெருந்தலைவர் காமராஜரின் உருவ சிலை நிறுவப்படும் என்கிற அறிவிப்பை தாங்கள் வெளியிட்டால் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான காமராஜரின் தொண்டர்கள் தங்களை போற்றி வணங்குவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பணிகள் முடிவடைந்த பின்பு ஒருங்கிணைந்த முனையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது இருப்பதை காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 45 விமானங்களை இயக்க முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் 1.97 லட்சம் சதுர மீட்டரில், அதி நவீன ஒருங்கிணைந்த விமான முனையம் உருவாகி வருகிறது.

    இந்தப் பணி 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இதன் முதல் கட்ட கட்டிடங்கள், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிவடைந்து இருக்க வேண்டும்.

    ஆனால் நிலங்கள் கையகப்படுத்துவது, தரையில் பாறைகள் இருந்ததால் பணிகள் தாமதம், கொரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாக நடந்து வந்தன.

    இந்நிலையில் தற்போது ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்ட கட்டிடப் பணி முழுவதும் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய முனையம் விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில் ஆண்டுக்கு சுமார் 2.7 கோடி பயணிகளை கையாள முடியும். இந்த முனையம் முழுவதும் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து இடங்களும் வண்ண விளக்குகளில் ஜொலிக்கின்றன.

    மேலும் இந்த கட்டிடத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பெருமைகளை பிரதிபலிக்கும் வண்ணமாக, வண்ணமயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் தனித்துவத்தில் வரையப்பட்டுள்ளன.

    80 சோதனை கவுண்டர்கள், 8 சுய சோதனை கவுண்டர்கள், 6 லக்கேஜ் கவுண்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை முடித்துக்கொண்டு எளிதில் செல்ல முடியும்.

    ஒருங்கிணைந்த முனையத்தின் 2-வது கட்ட பணி அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்பு ஒருங்கிணைந்த முனையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்படி இணைக்கும்போது, தற்போது இருப்பதை காட்டிலும் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 45 விமானங்களை இயக்க முடியும். அதேபோல் ஒரு ஆண்டுக்கு சுமார் 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் உடையதாக விமான நிலையம் அமையும்.

    புதிதாக அமைந்து உள்ள ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச தரத்துடன் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. பிரதமர் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் பயணிகளின் பொருட்களை கொண்டு செல்லும் கன்வேயர் மற்றும் அனைத்து வசதிகளின் சோதனை தொடங்கி நடந்து வருகிறது. மேலும் அங்கு பைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், கைவினைப்பொருட்கள், காதி பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அமைக்க ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த புதிய முனையத்தில் அதிக இடம் கிடைக்கும் என்பதால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கனவே, ஏர் பிரான்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகியவை தங்கள் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்து உள்ளன. ஒருங்கி ணைந்த புதிய முனையத்தின் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.
    • மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கக முனையம், தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களின் சரக்குகளையும் கையாண்டு வருகிறது.

    சென்னை விமான நிலைய சரக்ககத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 35 லட்சத்து 93 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 2 கோடியே 57 லட்சத்து 78 ஆயிரம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டு இருந்தது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை விமான நிலைய சரக்கரகத்தில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு 21 லட்சத்து 85 ஆயிரம் கிலோ குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உள்ள பன்னாட்டு சரக்கங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் சரக்குகள் கையாளப்பட்ட அளவு குறைந்துள்ளது.

    கோவை விமான நிலைய பன்னாட்டு சரக்ககத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் 6.22 லட்சம் கிலோ சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 3.40 லட்சம் கிலோ சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டுள்ளன.

    இது பற்றி சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்கக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னை விமான நிலைய சரக்ககத்தில் ஒவ்வொரு மாதமும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம். இந்த கையாளப்பட்ட சரக்குகளில் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு தான் குறைந்துள்ளது. ஏற்றுமதி சரக்குகள் அதே நிலையில் தான் இருக்கிறது. தற்போது நாம் சொந்தமாக பொருட்களை பெருமளவு உற்பத்தி செய்யப்படுவதால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்காக காத்திருக்கவில்லை. மிக முக்கியமாக 2022-ம் ஆண்டு கொரோனா 3-ம் அலை பெருமளவு தாக்கம் இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அதில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் முக்கிய பங்கு வகித்தது.

    ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி செய்வது மிகப்பெரும் அளவு குறைந்துவிட்டது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலைய சரக்ககங்களில் இறக்குமதி சரக்குகள் கையாளப்பட்டது குறைவுக்கு இதுதான் காரணம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் சென்னைக்கு தங்கம் கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.
    • வெளிநாடுகளில் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்பு குட்டிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பறவைகள், பூச்சிகள் கடத்தலும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் இருந்து தினசரி துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாங்காக் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 25 முதல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    இரண்டு ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது விமான சேவை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. பயணிகளின் எண்ணிக்கையும் வழக்கமான எண்ணிக்கைக்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்ப்படை பாதுகாப்பு வீரர்கள், விமானநிலைய ஊழியர்களின் கண்காணிப்பை மீறி தங்கம் கடத்தல் நீடித்து வருகிறது. இதில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சென்னைக்கு சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான தங்கங்கள் கடத்தி வரப்பட்டு உள்ளன. அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் பறிமுதல் செய்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்துள்ளனர்.

    தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க சினிமா பாணியில் விதவிதமாக யோசித்தாலும் அதிகாரிகள் அவர்களை கண்டுபிடித்து கைது நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    ஷு, பெல்ட், சூட்கேஸ், தலைமுடி, உள்ளாடை மற்றும் உடல் உறுப்புக்களில் மறைத்து வைத்து தங்கத்தை கட்டியாகவும், கம்பிகளாகவும், உருக்கியும் புதுப்புது மாடல்களில் கடத்தி வரும் சம்பவம் நீடித்து வருகிறது.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தாலும் சென்னைக்கு தங்கம் கடத்தலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.

    இது போல் வெளிநாடுகளில் இருந்து அரிய வகை குரங்குகள், பாம்பு குட்டிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பறவைகள், பூச்சிகள் கடத்தலும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

    இவை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்ற முழு விவரம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்து வருகின்றன. இதேபோல் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்த பாய்ச்சலில் ரங்கூன் விலங்கு மற்றும் அரியவகை பல்லி ஒன்றும் கடத்திவரப்பட்டது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 12 கோடி ஆகும். இதேபோல் போதை பவுடர், வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் தொடர்ந்து சிக்கி வருவது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 25-ந்தேதி மட்டும் வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 2.6 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ. 1.3 கோடி ஆகும்.

    இந்த கடத்தல் தங்கத்தை கடத்தல்காரர்கள் இடம் இருந்து வாங்கி விமான நிலைய அதிகாரி ஒருவர் வெளியே கொண்டு வந்த போது பிடிபட்டார். இது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    அதேபோல் கடந்த 12-ந்தேதி ரூ.3 கோடி மதிப்பிலான போதை பவுடர், 14-ந் தேதி ரூ. 98 லட்சம் மதிப்பிலான தங்கம், 15-ந் தேதி ரூ.8லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் ரூ.1 1/2 கோடி மதிப்பிலான தங்கம்,19-ந் தேதி ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம், 18-ந் தேதி ரூ.1.12கோடி மதிப்பிலான தங்கம், 22-ந்தேதி ரூ.69 லட்சம் மதிப்பிலான தங்கம், 23-ந் தேதி ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், 26-ந் தேதி ரூ.1.58 கோடி மதிப்பிலான தங்கத்தை கட்டியாகவும், உருக்கப்பட்ட நிலையிலும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் அடுத்தடுத்து பிடிபட்டு உள்ளது.

    இந்த தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினாலும் அவர்களின் பின்னணி மற்றும் விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. தங்கம் கடத்தலில் பிடிபடும் நபர்கள் தொடர்ந்து இதே போல் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கமிஷன் அடிப்படையில் குருவிகளாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்கிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    இதற்காக சென்னையில் பெரிய அளவில் தங்கம் கடத்தல் கும்பல் நெட்வொர்க் அமைத்து செயல்படுவது தெரியவந்துள்ளது. ஆனால் அவர்களை அதிகாரிகளால் கூண்டோடு பிடிக்க முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக வரும் பயணிகளை சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பாளர்கள் என்பதால் அவர்கள் இலங்கை, சிங்கப்பூர் மலேசியா வழியாக சென்னைக்கு வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் தற்போது இலங்கை வழியாக வரும் விமானங்களில் கடத்தல் தங்கம் பிடிபடுவது அதிகரித்து உள்ளது. இதனால் தங்கம் கடத்தலில் சென்னை முக்கிய மையமாக மாறி வருகிறது. இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகளும் விமானநிலைய அதிகாரிகளும் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தங்கம் கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக மட்டும் இருப்பதால் அவர்களுக்கு மூளையாக செயல்படும் நபர்கள் சிக்குவதில்லை. எனவே தங்கம் கடத்தலில் இருக்கும் முக்கிய புள்ளிகளை பிடித்தால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் நேர்மையாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறால் சில குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வனவிலங்கு கடத்தி வருவது, வெளிநாட்டு பணங்கள் எடுத்துச் செல்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அதை மீறி கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    ஏற்கனவே தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வரும் அதே நபர்கள் மீண்டும், மீண்டும் கடத்தி வருவது வாடிக்கையாக இருக்கிறது. புதுப்புது ஆட்களை கடத்தில் ஈடுபட செய்வதும் நடந்து வருகிறது. விமான நிலையத்தில் என்னதான் சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்காரர்களை பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்தாலும் முடிவில் அவர்களை காவல்துறையினரிடம் தான் ஒப்படைப்பார்கள். அவர்கள்தான் அவர்களின் குற்றத்திற்கு ஏற்ப வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் போலீசார் அவர்கள் மீது சுங்கத்துறை கடத்தல் பிரிவில் வழக்கு மட்டும் பதிவு செய்கின்றனர். ஏற்கனவே கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீதும், புதிதாக கடத்தல் மீதும் இரண்டு, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தால் தான் மீண்டும் அவர்கள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட தயங்குவார்கள், பயப்படுவார்கள் .ஆனால் போலீசாரோ சாதாரண வழக்கு பதிவு செய்வதால் அவர்கள் எளிதாக வெளியே வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோல் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பஸ் நிலையம், முக்கிய ரெயில் நிலையம், போலீஸ் நிலையங்களில் ஒட்டப்படுவதை போல் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளியின் புகைப்படங்கள் வெளிப்படையாக சென்னை விமான நிலையத்தின் பகுதிகளில் ஒட்ட வேண்டும். இதனால் பொதுமக்கள் கடத்தல் ஆசாமிகளை எளிதாக அடையாளம் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தரலாம். மேலும் விமான நிலையத்தில் பல்வேறு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கும் அவர்களை கண்டுபிடிக்க முடியும். அப்படி செய்தால் ஓரளவு கடத்தலை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

    அதேபோல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது துணிகளுக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    இந்த நிலையில் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதியில் இருந்த விமான நிறுவன ஊழியர் ஒருவர், திடீரென புறப்பாடு பகுதியில் வெளியேற முயற்சிப்பதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர். அந்த ஊழியரிடம் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர்.

    அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வெளிநாடுகளில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த ஆசாமி, சுங்க இலாகா அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தங்கத்தை விமான நிறுவன ஊழியரிடம் கொடுத்து அதனை விமான நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து கொடுக்கும்படி கூறியது தெரிந்தது.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.2 கோடியே 16 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவிய விமான நிறுவன ஊழியர் உள்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
    • விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது.
    • டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பயணிகள், விமானங்கள் எண்ணிக்கை, பெருமளவு அதிகரித்து உள்ளன. கடந்த மாதம் சென்னை உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் 12,380 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த விமானங்களில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் 17 லட்சத்து 61 ஆயிரத்து 426 பேர் பயணித்து உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 12,103 விமானங்களில் 17 லட்சத்து 22 ஆயிரத்து 496 பயணிகள் எண்ணிக்கையாக இருந்தது. ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 400 விமானங்களில் சராசரியாக 56 ஆயிரத்து 822 பயணிகள் பயணித்து உள்ளனர்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 392 விமானங்களில் 55 ஆயிரத்து 565 பயணிகள் பயணித்து உள்ளனர். டிசம்பர் மாதத்தைவிட ஜனவரி மாதம் பயணிகள் மற்றும் விமானங்களில் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முதன் முறையாக ஜனவரி மாதத்தில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் 62 ஆயிரத்து 486 பயணிகள் பயணித்தனர். சென்னை விமான நிலைய வரலாற்றில், ஒரே நாளில் அதிகபட்ச பயணிகள் பயணம் செய்தது சாதனையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    மீனம்பாக்கம் :

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் மிக்சி கிரைண்டர் இருந்ததால் அதை சந்தேகத்தின் பேரில் கழற்றி சோதனை செய்தனர். அப்போது கிரைண்டரில் தங்கத்தை வளைய வடிவத்தில் மாற்றி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் தங்கத்தை கம்பி போல் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள 383 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

    துபாயில் இருந்து சென்னைக்கு வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் டிராலி சூட்கேசில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கம்பிகளையும் கண்டுபிடித்து, அவரிடமிருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.நேற்று ஒரே நாளில் மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 953 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக 3 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
    • அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது.

    மீனம்பாக்கம்:

    சென்னை மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்து உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவை ஆப்பிரிக்க நாட்டு வனப்பகுதி மற்றும் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் அரிய வகை குரங்கு குட்டிகள் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக அரிய விலங்குகளை விதிமுறைப்படி நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான எந்த ஆவணங்களும் பயணியிடம் இல்லாதது உறுதியானது. குறிப்பாக மற்ற நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையிடமும், இந்திய வனவிலங்கு துறையிடமும் தடையில்லா சான்றிதழ் அனுமதி பெற்றதற்கான சான்றிதழ்களும் இருக்க வேண்டும்.

    இது போன்ற எந்தவிதமான சான்றிதழ்களும் இல்லாததால் 2 குரங்கு குட்டிகளையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், குரங்கு குட்டிகளை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மர்ம கவரைக் குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
    • தகவலின் அடிப்படையில் மோப்ப நாயுடன் வந்த வீரர்கள் அதில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையம் ஆகிய பகுதிகளை இணைக்கும்

    நடுபகுதிகளில் புதிய அடுக்குமாடி மல்டி லெவல் கார் பார்க்கிங் உள்ளது. இதன் அருகே உள்ள பழைய இருசக்கர வாகன பார்க்கிங் உள்ளது. தற்போது இங்கு எந்த வாகனம் நிறுத்தப்படுவதில்லை.

    இந்த இடத்தில் பயணிகளுடைய டிராலிகள் மட்டும் இருந்தது. இன்று காலை தனியார் செக்யூரிட்டிகள் பணியில் இருந்தனர். அப்போது ஒரு டிராலியில் மட்டும் ஆரஞ்சு நிற பிளாஸ்டிக் கவர் நீண்ட நேரமாக இருந்துள்ளது. இந்த மர்ம கவரைக் குறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மோப்ப நாயுடன் வந்த வீரர்கள் அதில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தனர்.

    பின்பு அதை திறந்து பார்க்கும் பொழுது அதில் ஒரு செல்போன் அட்டைப்பெட்டியில் ஒரு செல்போன் இருந்தது. மேலும் ஒரு ஐடி கார்டு மற்றும் ஒரு சட்டை இருந்தது தெரியவந்தது. அதை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இன்று விமான நிலைய மல்டி லெவல் அடுக்குமாடி புதிய கார் பார்க்கிங்கை மத்திய அமைச்சர் திறந்து வைக்கிறார். அதன் அருகே இந்த மர்ம பை கிடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • Whatsapp
    • Telegram