செய்திகள்
காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சண்டை - 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இன்று மாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹல்மத்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3.30 மணியளவில் ரோந்துப் படையினர் ஆராம்போரா பகுதியை நெருங்கியபோது அவர்களை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட ஹல்மத்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாலை 3.30 மணியளவில் ரோந்துப் படையினர் ஆராம்போரா பகுதியை நெருங்கியபோது அவர்களை இடைமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில மணிநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர்களிடமிருந்து வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. #tamilnews