செய்திகள்

மத்தியப்பிரதேசத்தில் வீடுகளுக்குள் புகுந்த இரும்பு லோடு லாரி - 8 பேர் உயிரிழப்பு

Published On 2018-02-21 09:26 GMT   |   Update On 2018-02-21 09:26 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் அருகே இரும்புக்கம்பி லோடு ஏற்றி வந்த லாரி, வீடுகளுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் அருகே உள்ள பரேலா என்ற கிராமத்தில் இன்று காலை இரும்புக்கம்பி ஏற்றிக்கொண்டு வந்த லாரியானது சாலையின் ஓரம் இருந்த வீடுகளுக்குள் திடீரென புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் ஜீப்பை தீவைத்து கொளுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனை அடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
Tags:    

Similar News