செய்திகள்

கர்னூலில் சிறுவனை கடித்து குதறி கொன்ற தெரு நாய்கள்

Published On 2018-02-21 08:52 GMT   |   Update On 2018-02-21 08:52 GMT
கர்னூலில் மரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகரி:

ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் சிட்டியலா கிராமத்தை சேர்ந்தவர் உசேன். இவரது 4 வயது மகன் இப்ராகிம் உசேன் தனது மனைவியுடன் வயல் வேலைக்கு சென்றார். சிறுவனை வயல் அருகே மரத்தில் தொட்டில் கட்டி தூங்க வைத்துவிட்டு சென்றனர். அப்போது 2 தெரு நாய்கள் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறின. முகம், கை, கால்களில் பலத்த காயமடைந்து சிறுவன் இப்ராகிம் பரிதாபமாக இறந்தான்.

வயலில் எந்திரத்தின் சத்தத்தால் சிறுவனின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. மாலையில் வேலை முடிந்து வந்த பெற்றோர் மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர். #tamilnews

Tags:    

Similar News