செய்திகள்

முதலாளி மனைவியுடன் கள்ளக்காதல் - வாலிபர் கண்ணில் ஆசிட் செலுத்தி குருடாக்கிய கொடூரம்

Published On 2018-02-18 06:48 GMT   |   Update On 2018-02-19 06:46 GMT
பீகார் மாநிலத்தில் முதலாளி மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த காரணத்தால் வாலிபரின் இரு கண்களிலும் ‘ஆசிட்’ செலுத்தி குருடாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பாராவுனி கிராமத்தை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அதே பகுதியில் உள்ள பண்ணையில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்தார்.

அப்போது அப்பண்ணை முதலாளியின் மனைவிக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து மகிழ்ந்தனர். அதை அறிந்த முதலாளி மனைவியை கண்டித்தார்.

எனவே, இருவரும் கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். அதை தொடர்ந்து தனது மனைவியை வாலிபர் கடத்திவிட்டதாக முதலாளி உதக்ரா போலீசில் புகார் செய்தார்.

அதை தொடர்ந்து இருவரையும் போலீசார் கண்டுபிடித்து கடந்த 16-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அப்பெண் தனது கணவருடன் வீட்டுக்கு சென்றார். வாலிபர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, அப்பெண்ணின் மைத்துனர் போலீஸ் நிலையம் வந்து தனது அண்ணன் மனைவி வாலிபருடன் வாழ விரும்புவதாகவும் அவரை வெளியே விடும்படியும் அழைத்து சென்றார். பின்னர் வாலிபர் ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு 20 பேர் கும்பல் திரண்டு சென்று வாலிபரை கடுமையாக அடித்து உதைத்தனர். பின்னர் வாலிபரின் கண்களில் ‘ஆசிட்’டை (திராகவம்) செலுத்தியது. இதனால் அவரது 2 கண்களும் குருடானது.

பின்னர் அவரை பக்வான்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஹனுமன் சவுக் பகுதியில் வீசி விட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பீகுசாரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News