செய்திகள்

ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு

Published On 2018-02-18 06:14 GMT   |   Update On 2018-02-18 06:14 GMT
ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்த மாதம் (மார்ச்) 16, 17 மற்றும் 18-ந் தேதி டெல்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் கலைத்து உத்தரவிட்டார். அதை தொடர்ந்து புதிய செயற்குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.

அதுவரை கட்சி பணிகளை கவனிக்க 34 உறுப்பினர்களை கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார் ஜூன கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டை அடுத்த மாதம் (மார்ச்) 16, 17 மற்றும் 18-ந் தேதி டெல்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டில் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
Tags:    

Similar News