செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

Published On 2018-01-17 03:36 GMT   |   Update On 2018-01-17 03:36 GMT
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. அவரது வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. 

இவ்வழக்கு விசாரணை தொடர்பாக, கடந்த 11-ந் தேதி, 16-ந் தேதிகளில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அடுத்தடுத்து 2 சம்மன்கள் அனுப்பி இருந்தது. அவர் சார்பில் அவருடைய பிரதிநிதி ஆஜராகி விளக்கம் அளித்தார். 

இந்நிலையில், மேலும் விளக்கம் தேவைப்படுவதால், நாளை (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. #KartiChidambaram #tamilnews

Tags:    

Similar News