search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karti Chidambaram"

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
    • தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சியினர் இறுதிநேர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்யச் சென்றார். அப்போது தேர்தல் அதிகாரிகள் அவரிடம் பிரசாரம் செய்வதற்கான அனுமதிக் கடிதம் குறித்து கேட்டனர். அப்போது ஆட்டோவில் சென்று பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தைக் காட்டினார்.

    தேர்தல் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்ததால் அவர்களுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் வார்டு வாரியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், தேர்தல் அதிகாரி செந்தில்வேல் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி உள்பட 60 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    • ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன்.

    பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி கார்த்திக் சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காரைக்குடியில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது,

    இந்திய கூட்டணி சார்பில் கை சின்னத்தில் போட்டியிடுவதாகவும், தனக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும்படியும் கூறினார். இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கித்துவம் ஆனது. மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. இந்தியா எந்த திசையை நோக்கி பயணிக்க போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. ஒரு வேட்பாளரை தாண்டிய தேர்தல் இது. இந்தியாவை இப்போது ஆண்டு கொண்டிருப்பது பாஜக, அவர்களின் கொள்கை இந்தி, இந்துத்துவா. அர்த்தம் என்னவென்றால் இந்தி மொழி தான் இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும், இந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் மற்ற மொழிகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்பது அவர்களின் எண்ணம். நமக்கு அது சரிப்பட்டு வராது. நமக்கு தமிழ் தான் முக்கியம். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    அவர்கள் இந்துத்துவா கொள்கையை பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி அவர்களை மட்டம் தட்டுவதுதான் பாஜகவினரின் வேலையாக உள்ளது.

    20 ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் கிடா வெட்டும் நிகழ்வை ரத்து செய்தனர். இந்த இந்துத்துவா பாஜக ஆட்சி மீண்டும் வந்தால் நமது ஊர்களில் கிடா வெட்டுவதையும், சேவல் நேர்த்திக்கடனாக கொடுப்பதையும் தடை செய்து விடுவார்கள். அவர்களது இந்துத்துவா என்பது முழுக்க முழுக்க வடஇந்திய, சமஸ்கிருத, மேல்தட்டு வெஜிட்டேரியன் இந்துத்துவா. நமது நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை. நமது கிராமபுற பழக்க வழக்கங்கள் தொடர வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    நாம் அனைத்து பொருட்களுக்கும் வரி கட்டுகிறோம். நாம் 1 ரூபாய் வரிக்கட்டினால் நமக்கு திரும்ப வருவது 29 பைசா மட்டும் தான். ஆனால் வட இந்தியாவான உத்திர பிரதேச மாநிலத்தில் 1 ரூபாய் வரிக்கட்டினால் 2.73 பைசா அவர்கள் திரும்ப பெறுகிறார்கள்.


    எல்லா பொருட்களுக்கும் விலைவாசி அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 55 ரூபாயாக இருந்த கேபிள் டிவியின் சந்தா இப்போது 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு முக்கியக்காரணம் இந்தி, இந்துத்துவா அரங்சாங்கமான பாஜக மட்டுமே. விலையேற்றத்தை சரிசெய்ய வேண்டும் என்றால் ஜிஎஸ்டி வரியை சரிசெய்ய வேண்டுமென்றால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி வந்தால் மட்டும் இந்த நிலை மாறும்.

    முதலமைச்சரின் நலத்திட்டங்கள் உங்களுக்கு நல்லப்படியாக வந்து கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கல்லூரி பெண்களுக்கு ஊக்கத்தொகை, இலவச பேருந்து இவை அனைத்தும் தொடர வேண்டுமென்றால் கை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தை 400 ரூபாயாக உயர்த்தி அளிக்கிறோம் என்று உறுதி அளிக்கிறேன். கல்விக்கடன் யாராவது வாங்கியிருந்தால் முழுமையாக ரத்து செய்யப்படும். இனிமேல் இரண்டு வாரங்களுக்கு யாரிடம் இருந்து உங்களுக்கு போன் வந்தால் ஹாலோ என்று கூறாமல் கைசின்னம் என்று தான் கூற வேண்டும்.

    நான் கூறிய அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றால் இந்திய கூட்டணியான கைசின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறினார்.

    • இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.
    • இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார்.

    அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார்.

    இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

    இதனை கேட்ட இளைஞர் ஒருவர், 'இதன் பிறகு எப்ப நீங்க வரபோறீங்க?', என்று நக்கலாக கேட்க, சீரியஸ் ஆன கார்த்திக் சிதம்பரம் அந்த இளைஞரை அழைத்து, 'இது ஒரு தவறான புரிதல். நினைத்தால் கூட 16 லட்சம் பேரை பார்க்க முடியாது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட 1500 பேரை திரும்ப திரும்ப பார்க்க முடியாது. 16 லட்சம் பேரை நிகழ்ச்சி இருந்தால் தான் பார்க்க முடியும். எம்பி வந்து பார்ப்பது இல்லை என்பது ஒரு தவறான புரிதல். எம்பி வந்து பார்க்க முடியாது. இதற்கு முன்னாள் ஒரு எம்பி இருந்தாரே அவரின் பேர் தெரியுமா? என்னை எதற்கு தேர்தெடுக்கிறீர்கள். பார்லிமெண்டில் பேசுவதற்குதான். நான் பார்லி மெண்டில் பேசாமல் இருந்தால் நீங்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம். மக்கள் குறைகளை நான் பலமுறை பார்லிமெண்டில் பேசியிருக்கிறேன். ஆனால் அதை யாரும் பார்க்கமாட்டீர்கள். இதுவரை நான் மனசாட்சிபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன்.

    இது ஜனநாயக நாடு. 16 லட்சம் பேரின் வீட்டிற்கும் தனித்தனியாக எம்பி சென்று பார்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் மேட்ச் வையுங்கள். என்னை அழையுங்கள். நான் வந்து அந்த விழாவில் கலந்து கொள்கி றேன். எனவே தவறான புரிதல் வேண்டாம்' என்று அவர் இளைஞர்களுக்கு எடுத்து கூறினார்.

    • சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.பி.எல். நிறுவனம் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது. இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி ரோஸ் அவின்யூ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி சிதம்பரம், அவரது உதவியாளர் எஸ்.பாஸ்கரராமன் மற்றும் ஒரு சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட 6 பேருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது. அவர்கள் அனைவரும் அடுத்த மாதம் 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது. அவர் மீதான 3-வது பண மோசடி வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது.
    • கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.

    சிவகங்கை:

    சிவகங்கை தொகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டு வருகிறது. 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கு தி.மு.க. நேரடியாக போட்டியிடவில்லை. அதன் பிறகு 2014-ல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் களம் கண்டதில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஆனாலும் சிவகங்கை எப்போதும் காங்கிரசின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.

    இங்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் ஆகிய இரு கோஷ்டிகள் உள்ளன. இரு தரப்பினரும் எப்போதும் ஒருவரையொருவர் போட்டி போட்டு கருத்துக்களை தெரிவித்து எதிர் வினையாற்றி வருவது காங்கிரசாரிடையே பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் தேர்தல் என்று வந்து விட்டால் ஒற்றுமை உணர்வுடன் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது இயல்பானதாகிவிட்டது.


    இந்நிலையில் கடந்த சில தேர்தல்களாக அங்கு ப. சிதம்பரம் அணியின் கையே ஓங்கி உள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் இரண்டு முறை எம்.பி. பதவி வகித்து வருகிறார். அண்மையில் தமிழக காங்கிரசின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்ற செல்வபெருந்தகை ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் அண்மை காலமாக கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுகள் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடி குறித்தும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்தும் கார்த்தி சிதம்பரம் பேசிய பேச்சுகள் கட்சியினரின் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இது எதிர்கோஷ்டியான சுதர்சனம் நாச்சியப்பன் அணியினருக்கு சாதகமாக அமைந்தது. கார்த்தி சிதம்பரம் பேச்சு குறித்து காங்கிரஸ் மேலிடம் வரையிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் அண்மையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் இரு கோஷ்டியினரும் கடும் வாக்குவாதத்திலும், மோதலிலும் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் அண்மையில் சிவகங்கை அருகே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனா முன் ஹசன் பயணம் செய்த காரை கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட சிலர் மறித்து காரின் சாவியை பறித்துச் சென்றனர். அவர்கள் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் என்பதால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.


    சுதர்சன நாச்சியப்பன், கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உள்ளிட்டோர் ஓரணியாக திரண்டு போட்டி கோஷ்டியாக இங்கு செயல்பட்டு வருகின்றனர். இது கார்த்தி சிதம்பரம் தரப்பினருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இரு தரப்பினரும் கடும் போட்டியில் குதித்து தங்களது தரப்புக்கு சீட் வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதற்கிடையில் தற்போது சிவகங்கை தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே ஒதுக்குவது உறுதியாகியுள்ளது. எனவே இங்கு மீண்டும் போட்டியிடுவது குறித்து இரு கோஷ்டிகள் மத்தியிலும் கடும் போட்டி நிலவி வருகிறது. மீண்டும் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதற்கான வியூகங்களை வகுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், அவரது தந்தையுமான ப.சிதம்பரம் மேலிடத்தை அணுகி வருகிறார். அவருக்கே மீண்டும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    அதே வேளையில் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள கார்த்தி சிதம்பரத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. எது எப்படி இருந்தாலும் இது போன்ற தொடர்ந்து வரும் களேபரங்களுக்கு மத்தியில் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து சிவகங்கை தொகுதியை தக்க வைப்பதில் கார்த்தி சிதம்பரம் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.

    கோஷ்டி பூசல்களை களைந்து ஒருதாய் பிள்ளையாக இருந்து முதலில் வெற்றியை பெற வேண்டும். அதன் பிறகு பூசல்கள், சண்டை, சச்சரவுகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் வெள்ளைக்கொடியை பறக்கவிட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் இந்த முறை சிவகங்கை தொகுதியில் வழக்கத்தை விட கூடுதல் அனல் பறக் கும் என்பதில் சந்தேகமில்லை.

    • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது.
    • கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை அடக்குமுறை மூலமே தீர்க்க பா.ஜனதா முயற்சிக்கிறது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை என்பது வெறும் கனவுதான். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனது தொகுதி மக்களுக்கு ஒரு எம்.பி.யாக என்னால் முடிந்ததை செய்துள்ளேன்.

    பெண்களுக்கான திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக கோரினேன். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படு வதை முற்றிலுமாக நிறுத்துவோம்.

    கடந்த காலங்களை விட தற்போது அதிகமாக மீனவர்கள் பாதிப்படைகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாங்குடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, நகர தலைவர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    பொது சிவில் சட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    நாட்டிலேயே உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் முதன்முதலாக கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    பொது சிவில் சட்டம் கொண்டு வந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:-

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 'இந்துத்துவா' பரிசோதனை கூடமாக உத்தரகாண்ட் உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பிரதமர் மோடியுடன் ராகுலை ஒப்பிட்டு பேசினார்.
    • இதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்து வரும் இவர், காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு எதிர் கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த கார்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகரான தலைவர் யாரும் நாட்டில் இல்லை என வெளிப்படையாக கருத்து சொல்லியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டுப் பேசியதற்கு விளக்கம் கேட்டு சிவகங்கை எம்.பி. கார்த்திக்கிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் குமாரசாமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது.
    • கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் வேதாந்தா குழுமத்தை சேர்ந்த டி.எஸ்.பி.எல். நிறுவனம் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்தாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் நிராகரித்து இருந்தார். சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருந்தது.

    சீன விசா பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்து கடந்த மாதம் 12 மற்றும் 16-ந்தேதி விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. கடந்த 23-ந்தேதி அவர் அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரது வாக்கு மூலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கார்த்தி சிதம்பரம் மீதான 3-வது பண மோசடி வழக்கு இதுவாகும். ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகளில் அவர் மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

    • காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
    • அமலாக்கத் துறை என்னை விசாரணைக்கு அழைப்பது வாடிக்கையாகி வருகிறது என்றார்.

    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டில் 263 சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகும்படி காங்கிரஸ் எம்.பி.யான கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜராக கார்த்தி சிதம்பரம் இன்று அமலாக்கத்துறை அலுவலகம் வந்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    அமலாக்கத்துறை அலுவலகத்தில் இது எனது 20வது நாள். இது வாடிக்கையாகி வருகிறது. அவர்கள் அதே விஷயங்களைக் கேட்கிறார்கள், நான் அதே பதில்களை தருகிறேன்.

    இது ஒரு கிடப்பில் உள்ள வழக்கு, முடிந்துவிட்ட வழக்கு. இந்த விஷயத்தை சி.பி.ஐ. பிராக்டிகலாக முடித்துவிட்டது. ஆனால் அதை மீண்டும் திறந்து என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறார்கள். நானும் அதையே மீண்டும் சொல்கிறேன்.

    இது கிறிஸ்மஸ் சீசன். அமலாக்கத்துறை என்னை தவறவிட்டது. அதனால் அவர்கள் மீண்டும் என்னை அழைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ள இங்கு வந்துள்ளேன் என தெரிவித்தார்.

    • களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.
    • அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க!

    தெலுங்கானா மாநிலத்தில் அதல பாதாளத்தில் கிடந்த காங்கிரசை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அயராத உழைப்பால் உயர்த்தி, ஆட்சியை கைப்பற்றி, முதல்-மந்திரியாகவும் ஆகி இருப்பவர் ரேவந்த் ரெட்டி. அவரது களப்பணியை சொந்த கட்சிக்காரர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சிக்காரர்களும் வியந்து பார்க்கிறார்கள்.

    இப்போது அதே பணியில் தமிழகத்தின் அடுத்த ரேவந்த் ரெட்டி, கார்த்தி ப.சிதம்பரம் தான் என்று காலரை தூக்கி விடுவதை பார்த்து சொந்த கட்சிக்காரர்களே கலாய்க்கிறார்கள்.

    கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் சத்திய மூர்த்தி பவனில் இவ்வாறு பேசவும் அதை கேட்ட சக காங்கிரஸ்காரர்களே வடிவேல் பாணியில் 'அய்யோ... அய்யோ... ஏம்பா... காமெடி கீமெடி பண்ணலியே' என்றனர்.

    அடுத்தவர், தலைவா... அம்பது வருஷமாகியும் இன்னும் அப்படியே தான் இருக்கிறோம். கூட்டணி இல்லண்ணா சிக்கல்தான் என்ற நிலையில் எப்ப ரேவந்த் ரெட்டியாக மாறி எப்ப ஆட்சிக்கு வருவது. அப்ப கூட்டணி தேவையில்லையா? பார்த்து பேசுங்க! இதை கேள்விப்பட்டால் தி.மு.க.வினர் கோவப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

    இவ்வாறு அவர் கூறியதையும் கேட்டு அவர்களுக்குள் கலாய்த்து கொண்டார்கள்.

    ஆனால் கார்த்தியின் ஆதரவாளர்கள் அவர்தான் தலைவராவார் என்பதிலும் அவரைப் பற்றிய தகவல்களை சமுக வளைத்தளங்களில் பரப்புவதிலும் தீவிரமாக இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்துக்குள் நடந்த புகை குண்டு தாக்குதல் பற்றி வலைதளங்களில் 'தலைவர் ராகுலை காத்தவர் எங்கள் கார்த்தி தலைவர் தான்' என்று கலர்கலராக பரப்பினார்கள்.

    • கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.
    • தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாகவே தலைவர் பதவிக்காக பலர் டெல்லியில் போராடி ஓய்ந்து விட்டார்கள். இதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

    எனக்கு தலைவர் பதவி மீது நீண்ட நாள் ஆசை. எனக்கு தலைவர் பதவியை கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். கட்சியையும் வளர்த்து காட்டுவேன் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

    மாநிலத்தில் வெளிப்படையாக பேசுவதுபோல் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து எப்படியாவது தலைவர் பதவியை பெற்றே தீருவது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 11-ந்தேதி டெல்லியில் பிரியங்கா காந்தியையும் கார்த்தி ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடமும் தலைவர் பதவி மீதான தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    தனக்கு எம்.பி. பதவியும் வேண்டாம். வேறு எந்த பதவியும் வேண்டாம். தலைவர் பதவி மட்டும் போதும். அது தனது நீண்ட நாள் ஆசை என்பதையும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும். அதாவது தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

    முதலில் பொறுப்பாளரை நியமிப்பார்கள். அவர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு வழங்குவார். அதை வைத்து தான் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள்.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 4 மாநிலங்களிலும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டியது உள்ளது. எனவே இன்னும் நிறைய காலஅவகாசம் எடுப்பார்கள். அதற்குள் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. எனவே டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றார்கள்.

    ×