செய்திகள்

காஷ்மீரில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2018-01-07 10:18 GMT   |   Update On 2018-01-07 10:18 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டார் பகுதியில், பணியில் இருந்த ராணுவ வீரர், தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டாரில் பாண்டவ்  பகுதியில் ராணுவ வீரர் இன்று பணியில் இருந்தார்.

திடீரென அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், சக வீரர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News