செய்திகள்

பீகார்: ரெயிலில் கடத்தி சென்ற ஒன்றரை கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்

Published On 2018-01-06 13:57 GMT   |   Update On 2018-01-06 13:57 GMT
பீகார் மாநிலத்தில் ரெயிலில் கடத்திச் சென்ற ஒன்றரை கோடி ரூபாய் தங்கத்தை வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
பாட்னா:

மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்துக்கு பிபூதி விரைவு ரெயில் சென்று வருகிறது. இந்த ரெயிலில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பிபூதி விரைவு ரெயில் இன்று காலை பாட்னா ரெயில் நிலையத்தை அடைந்தது. அப்போது அங்கு வந்த வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பி 3 ஏ.சி. பெட்டியில் சோதனை நடத்தினர்.

அதில், கியான்சந்த் வர்மா என்ற பயணி வைத்திருந்த பைகளில் இருந்த சுமார் 5.10 கிலோ எடையுடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூபாய் ஒன்றரை கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் என்பதும், வங்காளதேசத்துக்கு கடத்தமுயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News