செய்திகள்

எல்லை தாண்டிச் சென்று பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் - 3 பாக். வீரர்கள் பலி

Published On 2017-12-26 04:37 GMT   |   Update On 2017-12-26 04:37 GMT
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக எல்லை கோட்டை தாண்டிச் சென்று நடத்திய இந்தியா நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு:

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சனிக்கிழமை இந்திய நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 4 இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இதற்கு பதிலடியாக, நேற்று, இரவு ராவ்லாகோட் செக்டார் பகுதியில் உள்ள ராக்சிக்ரி அருகே எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிச் சென்று பாகிஸ்தான் நிலைகளை குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை இந்திய ராணுவ உளவுப்பிரிவு இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News