செய்திகள்

காஷ்மீர்: எல்லைப்பகுதியில் ஊடுருவல் முறியடிப்பு - 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2017-12-25 19:50 GMT   |   Update On 2017-12-25 19:50 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் வழியாக ஊருருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாத கும்பலை சேர்ந்த மூன்று பேரை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், ராக்சிக்ரியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக நேற்று மாலை சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதலில் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவிய மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் ஒருவர் இந்த தாக்குதலில் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நவ்ஷேரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ மேஜர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News