செய்திகள்

நீதி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது: கனிமொழி பேட்டி

Published On 2017-12-21 06:57 GMT   |   Update On 2017-12-21 06:57 GMT
2ஜி வழக்கில் நீண்ட போராட்டத்துக்கு பிறகு நியாயம், நீதி வென்று இருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கனிமொழி கூறினார்.

புதுடெல்லி:

2ஜி வழக்கில் விடுதலை என நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பை அறிவித்ததும் கோர்ட்டில் இருந்த கனிமொழி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

கோர்ட்டுக்கு வெளியே கூடி இருந்த தி.மு.க.வினரைப் பார்த்து கை அசைத்தார். விடுதலையானது குறித்து கனிமொழி கூறியதாவது:-

நீண்ட போராட்டத்துக்கு பிறகு நியாயம் - நீதி வென்று இருக்கிறது. எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தேன். 7 ஆண்டு காலமாக மறுபடியும் மறுபடியும் வழக்கு விசாரணை என்று பல அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

இதனால் பெரிய அழுத்தம் இருந்தது. இப்போது நிம்மதி கிடைத்துள்ளது. இது பொய் வழக்கு என்று தி.மு.க. கூறி வந்ததற்கு நியாயம் கிடைத்து இருக்கிறது.

தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. அப்பீல் செய்தால் அதையும் நாங்கள் எதிர்கொள்வோம்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Tags:    

Similar News