செய்திகள்

ம.பி: விபத்து மீட்பு பணியில் இருந்தவர்கள் மீது மோதிய லாரி - 7 பேர் பலி

Published On 2017-12-14 06:13 GMT   |   Update On 2017-12-14 06:13 GMT
மத்தியப்பிரதேசம் மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் நேற்றிரவு நடந்த ஒரு விபத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் பெட்டூல் மாவட்டத்தில் உள்ள போர்தேகி கிராமத்திற்கு அருகே நேற்று இரவு ஒரு விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் அங்குள்ள மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மற்றொரு லாரி அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற கிராமத்தினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News