செய்திகள்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி

Published On 2017-12-12 05:47 GMT   |   Update On 2017-12-12 08:58 GMT
நாட்டிலேயே முதல் முறையாக சபர்மதி ஆற்றில் இயக்கப்பட்ட நீர்வழி விமானத்தில் பிரதமர் மோடி இன்று பயணம் செய்தார்.
காந்திநகர்:

குஜராத் சட்ட சபை தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று பிரதமர் மோடி மெக்சன்னா மாவட்டத்தின் அம்பாஜி கோவிலுக்கு செல்கிறார். தரை வழியாக செல்வதாக இருந்த அவரது பயணம் பாதுகாப்பு காரணமாக விமானம் மூலம் செல்வார் எனக்கூறப்பட்டது.



இந்நிலையில், இன்று காலை மோடி சபர்மதி ஆற்றிலிருந்து நீர்வழி விமானம் மூலமாக தாரோய் அணைக்கு சென்றடைந்தார். இந்தியாவில் இயக்கப்படும் முதல் நீர்வழி விமானம் இதுவாகும். முதல் முதலாக இயக்கப்பட்ட கடல் விமானத்தில் பயணம் செய்த முதல் பயணி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இதுகுறித்து முதல்-மந்திரி விஜய் ரூபானி பேசுகையில், 'மோடி கடல் விமானம் மூலம் அம்பாஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு மீண்டும் சபர்மதிக்கு வந்தடைவார்' என தெரிவித்தார்.
Tags:    

Similar News