செய்திகள்

மத்தியபிரதேசத்தில் ரெயிலில் பெண் கற்பழிப்பு

Published On 2017-11-27 06:40 GMT   |   Update On 2017-11-27 06:40 GMT
மத்தியபிரதேசத்தில் பயணிகள் ரெயிலில் தின்பண்டங்கள் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண்னை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் துர்க்கில் இருந்து போபாலுக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

இந்த ரெயிலில் 25 வயது பெண் ஒருவர் தின்பண்டங்கள் விற்றுக் கொண்டிருந்தார். அவர் தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பண்டங்களை விற்று விட்டு அடுத்த பெட்டிக்கு செல்வதற்காக கழிவறை இருக்கும் வழியாக சென்றார்.

அப்போது அங்கு தின்பண்டங்கள் விற்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை திடீர் என கழிவறைக்குள் இழுத்து சென்று கதவை பூட்டினார். அங்கு வைத்து அந்த பெண்ணை கற்பழித்தார்.

பின்னர் இது பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி சென்றார். ஆனால் அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அவரை கற்பழித்தது பஜாரியா என்ற இடத்தை சேர்ந்த ஜேத்து என்று தெரியவந்தது. அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News