செய்திகள்
தேனீருடன் மன் கி பாத்: குஜராத் பா.ஜ.க. தொண்டர்கள் முயற்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
குஜராத் மாநிலத்தில் தேனீருடன் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்பதற்கு பா.ஜ.க. தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளதை அறிந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்ததும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் விதமாக மன் கி பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி பேசும் 38-வது மன் கி பாத் நிகழ்ச்சி வானொலியில் நாளை ஒலிபரப்பாகிறது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் மன் கி பாத் பேச்சை கேட்க பா.ஜ.க.வினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் முழுவதிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் தேனீர் சாப்பிட்டபடி பிரதமரின் பேச்சை கேட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் செய்துள்ள ஏற்பாடுகளை பிரதமர் மோடி அறிந்தார். இதையடுத்து, பா.ஜ.க.
தொண்டர்களுக்கு டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.