செய்திகள்
ஐதராபாத்: புத்தகத்திற்கு பதிலாக பாம்பை வெளியே எடுத்த மாணவன்
ஐதராபாத்தில் உள்ள பள்ளியில் மாணவன் பையிலிருந்து புத்தகத்திற்கு பதிலாக பாம்பை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லம்பாடிபள்ளி பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்றசிறுவன் வழக்கம் போல் சென்றுள்ளான். வகுப்பு தொடங்கிய பின் மாணவன் பையிலிருந்து புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். கையை வெளியே எடுத்த போது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவன் கையில் புத்தகத்திற்கு பதிலாக பாம்பு இருந்தது. அதைக்கண்ட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மாணவனும் பாம்பை கீழே போட்டு விட்டு ஓடினான். பாம்பானது யாரையும் தாக்காமல் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது.
மாணவன் பிரவீன் வீட்டை சுற்றி காடு மற்றும் புதர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் போது பாம்பு பைக்குள் நுழைந்துள்ளது. அதை கவனிக்காமல் சிறுவன் பையை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். புத்தகப்பையிலிருந்து பாம்பு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லம்பாடிபள்ளி பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்றசிறுவன் வழக்கம் போல் சென்றுள்ளான். வகுப்பு தொடங்கிய பின் மாணவன் பையிலிருந்து புத்தகத்தை எடுப்பதற்காக கையை விட்டுள்ளான். கையை வெளியே எடுத்த போது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவன் கையில் புத்தகத்திற்கு பதிலாக பாம்பு இருந்தது. அதைக்கண்ட அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மாணவனும் பாம்பை கீழே போட்டு விட்டு ஓடினான். பாம்பானது யாரையும் தாக்காமல் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றது.
மாணவன் பிரவீன் வீட்டை சுற்றி காடு மற்றும் புதர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் இருக்கும் போது பாம்பு பைக்குள் நுழைந்துள்ளது. அதை கவனிக்காமல் சிறுவன் பையை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். புத்தகப்பையிலிருந்து பாம்பு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.