செய்திகள்
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம்:
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் பருத்தி துறை கடற்பகுதி அருகே ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக திசை மாறி வந்தது தெரியவந்தையடுத்து, எச்சரிக்கை மட்டும் விடுத்து மீனவர்களை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் பருத்தி துறை கடற்பகுதி அருகே ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று அவர்கள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் சீற்றம் காரணமாக திசை மாறி வந்தது தெரியவந்தையடுத்து, எச்சரிக்கை மட்டும் விடுத்து மீனவர்களை விடுவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.