செய்திகள்
டெல்லியில் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு: அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம்
டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக ஒற்றை, இரட்டைப் படை எண்கள் கொண்ட வாகனங்களை இயக்கும் நாட்களில் அரசு பஸ்களில் மக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.
2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபாடுவதை தவிர்க்கும் விதமாக, திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒற்றைப்படை பதிவு எண் வாகனங்களையும், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் இரட்டைப்படை வாகனங்களையும் இயக்க அரசு முடிவு செய்தது. இதற்கான சோதனை ஓட்டம் 2 கட்டமாக கடந்த ஆண்டு நடந்தது.
2-வது கட்ட சோதனை ஓட்டம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவசர காலங்களில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது டெல்லியில் காற்று மாசுபாடு மிகுந்து கணப்படுவதால் அங்கு வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு முறை அமல்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.
இத்திட்டம் அமலில் இருக்கும் 5 நாட்களிலும் மக்கள் மாநில அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மாநில போக்குவரத்து மந்திரி கைலாஷ் கெலாட் கூறி உள்ளார். இது மக்கள் அரசு போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்கப்படுத்தும் என முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.