செய்திகள்

பா.ஜனதாவை ராமர் தண்டிப்பார்: லல்லு பிரசாத் யாதவ் சொல்கிறார்

Published On 2017-10-20 11:08 GMT   |   Update On 2017-10-20 11:08 GMT
ராமர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் பா.ஜனதாவை ராமரே தண்டிப்பார் என்று லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.
பாட்னா:

மத்தியில் உள்ள பா.ஜனதா அரசும் உத்தரபிரதேச அரசும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அயோத்தியில் தீபாவளி கொண்டாட்டத்தில் ராமர்- சீதை வேடமிட்டவர்களை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கவுரவித்தார்.

பா.ஜனதா ராமருக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து பீகார் முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடவுள் ராமர் பெயரைச் சொல்லி பா.ஜனதாவினர் அரசியல் நாடகம் ஆடுவது தவறானது. நெறி முறையற்றது ஆகும். ராமர் பெயரைச் சொல்லி முதல் -மந்திரி யோகி ஆதித்ய நாத் அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படி வழிபாடு மேற்கொள்ள சுதந்திரம் உள்ளது. ஆனால் பா.ஜனதாவினர் குறிப்பாக யோகி ஆதித்யநாத் மதத்தின் பெயரால் அரசியல் நாடகம் ஆடுகிறார்.

ராமர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் பா.ஜனதாவை ராமரே தண்டிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News