செய்திகள்

அக்.13-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு

Published On 2017-10-07 13:22 GMT   |   Update On 2017-10-07 13:22 GMT
அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

அன்றாட விலை நிர்ணயம், வீடு தேடி பெட்ரோல் விநியோகம் ஆகியவற்றை எதிர்த்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

வீடுகளுக்கு பெட்ரோல், டீசலை கொண்டு சென்று நேரடியாக விநியோகம் செய்வது மற்றும் பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 13-ம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வரும் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News