search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை"

    • சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை குறைக்க இயலும்.
    • இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை  வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை. பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய மந்திரி நிதின் கட்கரி ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு வெறும் 15 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்று கூறினார். ஆனால் இதை சாத்தியமாக்குவதற்கான வழிமுறைகளையும் அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் 60 சதவீதம் எத்தனாலுக்கு மாறவேண்டும். 40 சதவீதம் மின் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் (மின்சார வாகனம்). சாலைகளில் எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் அதிகரிக்கும்போது பெட்ரோல் விலையை நம்மால் குறைக்க இயலும்.

    இனி விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனால் மூலமாக வாகனங்கள் இயங்கவேண்டும் என்ற எண்ணத்தில் அரசு இருக்கிறது. வாகன பயன்பாட்டிற்கு சராசரியாக 60% எத்தனால் மற்றும் 40% மின்சாரம் எடுத்துக் கொண்டால், பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் மக்களும் பயனடைவார்கள். இது நடைமுறைக்கு வந்தால் மாசுபாடு குறைவதுடன், இறக்குமதிக்கு செலவிடப்படும் ரூ.16 லட்சம் கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு வந்து சேரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிக்கு அரசு ரூ.16 லட்சம் கோடி செலவிடுகிறது. உள்நாட்டிலேயே எத்தனால் உற்பத்தி மற்றும் தேவையான மின்சாரம் தயாரிக்க முடிந்தால், நாம் எரிபொருட்களுக்காக வெளிநாடுகளை நம்பியிருக்க தேவையில்லை என்பதே அவரது கருத்தாக உள்ளது.

    கரும்பு சக்கை, வைக்கோல், கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிப்பதால், அந்த பொருட்களை கொள்முதல் செய்வதன்மூலம் விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும். நம் தேவை குறையும்போது கச்சா எண்ணெய்யை குறைந்த விலைக்கு கேட்க முடியும்.

    மத்திய மந்திரி நிதின் கட்காரியின் கருத்தின்படி, அனைத்து வாகனங்களும் எத்தனால் மற்றும் மின்சாரத்திற்கு மாறும்  நடைமுறைகள் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும்.

    அனைத்து வாகனங்களும் மின்சாரம் மற்றும் எத்தனாலுக்கு மாறிவிட்டால், அதற்கு பிறகு ஒருசில பயன்பாடுகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஒருசிலர் வைத்திருக்கும் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் தேவைப்படும். ஆனால் இது நடைமுறைக்கு வர 20-30 ஆண்டுகள் ஆகலாம்.

    ஏனென்றால் இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் முதல் வாகனம் இனிமேல்தான் வர உள்ளது. முதல் வாகனத்தை ஆகஸ்ட் மாதம் நிதின் கட்காரி அறிமுகம் செய்ய உள்ளார். அதன்பிறகு எத்தனால் வாகனங்கள் அதிகரிக்க வேண்டும், மின்சார வாகனங்களும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான், பெட்ரோல்-டீசல் தேவை குறைந்து விலை குறையும். அப்படியே குறைந்தாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் தேவைப்படாது என்பதே நிதர்சனம்.

    • அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.
    • சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து உள்ளன.

    கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பாகிஸ்தானிடம் அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வருவதால் அந்நாட்டு அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

    இதனால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்க ளின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. அடுத்த 15 நாட்களுக்குள் பெட்ரோல் விலையை ரூ.10 முதல் ரூ.14 வரை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதி மந்திரி இஷாக்தார் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய செலவுகள் அதிகரிப்பு மற்றும் நாணய விகித மாறுபாடு ஆகியவை காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.77 அதிகரித்து ரூ.286.77-க்கு விற்கப்படுகிறது. அதே போல் மண்எண்ணெய் லிட்டருக்கு ரூ.5.78 உயர்த்தப்பட்டு ரூ.186.07-க்கு விற்கிறது.

    அதே வேளையில் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. டீசல் லிட்டர் ரூ.293-க்கும், லைட் டீசல் ரூ.174.68-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானில் பண வீக்கம் மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மாதம் பணவீக்கம் 35 சதவீதமாக இருந்தது.

    • பாகிஸ்தானில் டீசல் லிட்டருக்கு ரூ.227.80 ஆக விற்பனை.
    • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.214.80 காசுகளாக விற்கப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பொருளாதார நெருக்கடி, பணவீக்கத்தால் பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டீசல் லிட்டருக்கு ரூ.227.80 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.214.80 ஆகவும் விற்பனையாகிறது.

    ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.171.83 காசுகளாக விற்கப்படுகிறது. மோட்டார் பம்புகளை இயக்க வசதியானவர்கள் மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் லேசான வகை டீசலை பயன்படுத்தி வருகின்றனர். அதன் விலை ஒரு லிட்டர் ரூ.169 ஆக உள்ளது. இதன் விலை குறையும் என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறித்து தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றிய பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், நடப்பாண்டுவரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார். லேசான டீசல் விலை அதே அளவில் நீடிக்கும் என்றும் அவர் கூறினார். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வழிகாட்டுதலின் பேரிலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலாகியுள்ளது.
    • பிற எரிபொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், இலங்கையில் நேற்று முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி, 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற எரிபொருள்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    • மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது
    • தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வோம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமாரி மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை முன்னிறுத்தும் வகையில் திராவிட நட்பு கழக அறிமுக கூட்டம் குளச்சல் புனித காணிக்கை மாதா மண்டபத்தில் மைக்கேல் ஜோஸ் தலைமையில் நடந்தது.

    திராவிடர் இயக்க தமிழர் பேரவை துணை பொதுச்செயலாளர் சிங்கராயர், கிழக்கு மாவட்ட செயலாளர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் நட்பு கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    மத நல்லிணக்கத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் வலிமையான கட்சி. எங்கள் கொள்கை சமூக நீதி, ஜனநாயகம், மத நல்லிணக்கம். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள் தான். அதற்காக கோவில்களை இடிக்கவில்லை.

    பெட்ரோல், விலை, சமையல் கேஸ் விலை உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. 1947 ல் பெட்ரோல் விலை 27 காசுகள் மட்டும்தான். பின்னர் 40 வருடங்கள் கழித்துதான் ரூ.10 உயர்ந்தது.2013 ல் ஒரு பேரல் கச்சா மூலப்பொருள் ரூ.140 ஆக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72 தான். 2015, 2016 ல் கச்சா விலை ரூ.47 ஆனது.அப்போது ரூ.30 குறைத்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கலால் வரி போட்டு பெட்ரோல் விலையை உயர்த்தியது. மன்மோகன் சிங் பிரதமர் பதவியிலிருந்து இறங்கும் போது சமையல் கேஸ் விலை ரூ.410 ஆக இருந்தது.அப்போது ரூ.210 மானியம் வழங்கப்பட்டது.

    அதன்பின் வந்த பாரதிய ஜனதா மானியத்தை வங்கி கணக்கில் போடும் என்றது. ஆனால் ரூ.14 தான் வங்கியில் போட்டது.அதையும் இப்போது போடுவதாக தெரிய வில்லை. பாரதிய ஜனதா கடவுள், மதத்தைப்பற்றி பேசிதான் ஆட்சிக்கு வருகிறது. எங்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சமூக நீதி, ஜனநாயகம், மத நல்லிணக்கம் வேண்டும்.அதற்காகக்தான் நாங்கள் தி.மு.க.வுக்கு துணை நிற்கிறோம்.தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்வோம் என கூறியது. மீனவர்களின் பிரச்சினைகளை முதல்வரிடம் கொண்டு செல்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சாய் எண்ணெய் விலையுடன் தொடர்புடையதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்றம் இறக்கம் உள்ளது என மத்திய இணை அமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றியமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியது. ஏற்கனவே மாநில அரசுகள் செஸ் வரி விதிப்பதால் விலை உயர்ந்து கொண்டு சென்றது. மத்திய அரசு கலால் வரியை குறைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் வலியுறுத்தின.

    நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 5 ரூபாய் அளவிற்கும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாய் அளவிற்கும் மத்திய அரசு குறைத்தது. மாநில அரசுகளும் செஸ் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

    ஆனால், பா.ஜனதா ஆளும் மாநிலங்களைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் செஸ் வரியை குறைக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அமெரிக்கா முடிவு செய்கிறது. ஆனால் மத்திய அரசு மீது குற்றம் சுமத்துவது தவறு என மத்திய ரெயில்வேத்துறை இணைமைச்சர் ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டி மாநிலத்தின் அவுரங்காபாத்தில் புதிய பா.ஜனதா கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்த தன்வே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து கூறியதாவது:-

    இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராட்ட பேரணி நடைபெற்றது. ஆனால், எரிபொருள் விலை சர்வதேச சந்தையின் சூழ்நிலையுடன் தொடர்புடையது. ஒருநாள் லிட்டருக்கு 35 பைசா உயரும், அடுத்த நாள் ஒரு ரூபாய் குறையும். அதன்பின் ஐம்பது பைசா உயரும்.

    இந்த விலை எல்லாவற்றையும் அமெரிக்கா முடிவு செய்கிறது. ஆகவே, எரிபொருள் விலை உயர்வுக்காக மத்திய அரசை குற்றம்சாட்டுவது தவறானது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க தயாராக இல்லை. நாடு மத்திய அரசின் நிதியுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. நாம் இதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்’’ என்றார்.
    பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ChandrababuNaidu #PetrolPrice

    அமராவதி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருக்கிறது.

    இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 ஆகவும், டீசல் விலை ரூ.75.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக அமராவதியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பலமே காரணம். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி காரணமில்லை.


    பணமதிப்பு நீக்கம் மிகப்பெரிய தோல்வியாகும். ஏனென்றால் மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    மத்திய அரசின் தவறான கொள்கையால் கடந்த 1½ ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்தால்தான் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்.

    பெட்ரோல் விலை விரைவில் 100 ரூபாயை தொடும். இது நாட்டை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதேபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயாக சரிவடையும்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். #ChandrababuNaidu #PetrolPrice

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்ததால் கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 69 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 1 ரூபாய் 76 காசு உயர்ந்துள்ளது. #Petrol #Diesel
    சென்னை:

    பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரொல்- டீசல் விலை உயராமல் இருந்தது.

    தேர்தலின் போது பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தால் அது பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த 13-ந்தேதியில் இருந்து இன்றுவரை தினமும் உயர்ந்துள்ள பெட்ரோல்- டீசல் விலை விபரம் வருமாறு:-

    கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை 1 ரூபாய் 69 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 1 ரூபாய் 76 காசு உயர்ந்துள்ளது.

    இதுபற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகையில், பெட்ரோல்- டீசல் விலை வரும் வாரங்களில் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை உயரலாம்

    ஒரே சமயத்தில் விலையை உயர்த்தினால் மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் தினமும் 25 காசு 30 காசு வீதம் விலையை உயர்த்தி வருகிறார்கள்.

    பெட்ரோல் பங்குக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது 1 லிட்டர் அல்லது 100 ரூபாய்க்கு பெட்ரோல், டீசல் போடுவதால் விலை உயர்வை பற்றி கேள்வி கேட்காமல் சென்று விடுகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Petrol #Diesel
    ×