செய்திகள்

சொத்து தகராறின் கோரமுகம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் குத்திக் கொலை

Published On 2017-10-07 09:17 GMT   |   Update On 2017-10-07 09:17 GMT
தலைநகர் டெல்லியில் 82 வயது மூதாட்டி உட்பட 5 பேரை சொத்து தகராறில் இன்று குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி அருகேயுள்ள ஷடாரா பகுதியில் உள்ள மானசரோவர் பார்க் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் கொல்லப்பட்டதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊர்மிளா ஜின்டால்(82), சங்கீதா குப்தா(56), நுபுர் ஜின்டால்(48), அஞ்சலி ஜின்டால்(38) ராகேஷ் ஆகியோரின் பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட சொத்து தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதும் போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News