செய்திகள்
காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் தேர்வு: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிவிப்பு
காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் வாதிடுவார் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்துவருகிறது. இந்த மனுக்களை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, காவிரி வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராக வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், காவிரி வழக்கில் வாதிடுவதற்காக தொழில்நுட்ப குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவிரி வழக்கில் தொழில்நுட்ப ரிதியான வாதங்களை முன்வைத்து வாதாடுவதற்காக காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், உச்ச நீதிமன்றத்தில் அவர் தமிழக அரசின் வாதங்களை முன்வைப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்துவருகிறது. இந்த மனுக்களை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, காவிரி வழக்கில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆஜராக வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், காவிரி வழக்கில் வாதிடுவதற்காக தொழில்நுட்ப குழு தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவிரி வழக்கில் தொழில்நுட்ப ரிதியான வாதங்களை முன்வைத்து வாதாடுவதற்காக காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், உச்ச நீதிமன்றத்தில் அவர் தமிழக அரசின் வாதங்களை முன்வைப்பார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.