செய்திகள்

டெல்லியில் அல்-கொய்தா தீவிரவாதி கைது

Published On 2017-09-18 09:42 GMT   |   Update On 2017-09-18 09:42 GMT
தடை செய்யப்பட்ட அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டெல்லி விகாஸ் மார்க் பகுதியில் தங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்தும் அப்பகுதிக்கு விரைந்து சென்ற டெல்லி சிறப்புப் படை போலீசார், ஷவுமன் ஹக்(27) என்ற வாலிபரை நேற்று கைது செய்தனர்.

முன்னதாக, சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சையத் முஹம்மது ஜிஷான் அலி(29), மற்றும் மேற்கு வங்காளம் மாநில போலீசார் அளித்த தகவலின்பேரில் ராஜா-உல்-அஹமத்(25) ஆகியோரை அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த மாதம் டெல்லி போலீசார் கைது செய்தது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News