செய்திகள்
கேரளா: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை வழக்கில் பெண் கைது
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிப்பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிப்பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிப்பின் என்பவர் கடந்த மாதம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டியை (SDPI) சேர்ந்த பிரமுகர் அப்துல் லத்தீப் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அப்துல் லத்தீப் மனைவி ஷாஹிதா என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். எடப்பல் பகுதியில் உள்ள ஷாஹிதாவின் வீட்டில் வைத்து பிப்பின் கொலைக்கான சதி திட்டம் தீட்டப்பட்டதை கண்டுபிடித்த போலீசார், நேற்று மாலை அவரை கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிப்பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியின் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் பிப்பின் என்பவர் கடந்த மாதம் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டியை (SDPI) சேர்ந்த பிரமுகர் அப்துல் லத்தீப் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அப்துல் லத்தீப் மனைவி ஷாஹிதா என்பவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர். எடப்பல் பகுதியில் உள்ள ஷாஹிதாவின் வீட்டில் வைத்து பிப்பின் கொலைக்கான சதி திட்டம் தீட்டப்பட்டதை கண்டுபிடித்த போலீசார், நேற்று மாலை அவரை கைது செய்தனர்.