செய்திகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

Published On 2017-09-14 22:14 GMT   |   Update On 2017-09-14 22:14 GMT
டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:

டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்றுள்ள விவசாயிகள் தினமும் நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விவசாயிகளின் இந்த போராட்டம் 61-வது நாளாக நேற்று நடைபெற்றது. அப்போது விவசாயிகள் பிச்சை எடுத்து நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ‘மோடியே மோடியே எங்களை பிச்சை எடுக்க வைத்து விட்டாயே’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News