செய்திகள்

பெங்களூர்: கனமழை காரணமாக கார் மீது மரம் விழுந்து விபத்து - மூவர் பலி

Published On 2017-09-08 20:51 GMT   |   Update On 2017-09-08 20:51 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்றிரவு கார் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூர்:

கர்நாடக மாநில தலைநகரின் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. நேற்றிரவு மினர்வா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் மழை காரணமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே காரை நிறுத்தியுள்ளனர்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த மரம் வேகமாக காரின் மீது விழுந்தது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரின் உள்ளே இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

காரில் இருந்த மற்ற இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News